நாக்பூரில் நேற்று நடந்த 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டம் முடிவதற்கு குறிப்பிட்ட நேரத்தை விட 45 நிமிடம் அதிகமானது.
இந்திய வீரர்கள் மெதுவாக பந்துவீசியதன் காரணமாகத் தான் நேரம் அதிகமானது என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மெதுவாக பந்துவீசியதற்காக இந்திய அணி கேப்டன் டோனிக்கு 2 ஒருநாள் போட்டியில் விளையாட ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடுவர் ஜெப் குரோவ் தடை விதித்துள்ளார்.
இந்த தடை காரணமாக இலங்கைக்கு எதிராக நடை பெறும் 3-வது போட்டி (21-ந்தேதி), 4-வது போட்டி களில் (24-ந்தேதி) டோனி விளையாட முடியாது. இதனால் இந்த 2 போட்டிக்கும் தற்காலிக கேப்டனாக தொடக்க வீரர் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக