இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

கருத்துக்கணிப்பில் மக்கள் ஆதரவு ஜனாதிபதி மஹிந்தவுக்கே

JKR  வெள்ளி, 18 டிசம்பர், 2009


ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றியீட்டுவார் என கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் டலஸ், கடந்த தேர்தல்களின் போது மிகக் குறைந்த வீதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்குகளைப் பெற்ற 9 மாவட்டங்களை தெரிவு செய்து 5200 பேர் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்புக்களில் 3254 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். இது 62.2 வீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவிப்பதாக காட்டுகிறது.

1292 பேர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இது 24.8 வீதமாக காட்டுகிறது. 654 பேர் இன்னும் தெளிவான முடிவை எடுக்காத நிலையில் இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டு கருத்துக் கணிப்புகளை நடத்துகிறது. அதில் முதலாவது கருத்துக் கணிப்பின் முடிவு எமக்கு இப்போது கிடைத்துள்ளது.

இதன்படியே இந்த முடிவுகள் எமக்கு கிடைத்துள்ளன என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார்.

எமது முதலாவது பிரசாரக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அநுராதபுரம் புனித பூமியில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் டலஸ் குறிப்பிட்டார். வேட்பு மனுத்தாக்கலின்போது ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவரான சரத் கோன்கஹகே, சரத் பொன்சேகா தொடர்பாக தெரிவித்த ஆட்சேபனை விடயம் நீதித்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா அமெரிக்க பிரஜை என்ற ஆட்சேபனையை சரத் கோன்கஹகே முன்வைத்தார். ஆணையாளரினால் அவ் ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும் நீதிமன்றத்தினூடாக விடயத்தைக் கொண்டுவர முடியும் என ஆணையாளர் தெரிவித்தார். அதனை கோன்கஹகே நீதிமன்றம் கொண்டு செல்வாரா இல்லையா என்பது எமக்குத் தேவையில்லை. அது கோன்கஹ கேயின் வேலை. எனினும் வேட்பாளர் சரத் பொன்சேகா அமெரிக்க பிரஜை என்று கூறியது நாங்களல்ல. சரத் பொன்சேகாவின் தற்போதைய ஊடகப் பேச்சாளராக இருப்பவர்தான். அன்றும் ஒருமுறை இந்தக் குற்றச்சாட்டையும் முன்வைத்திரு க்கிறார். அதனால்தான் இதனை ஒரு பாரதூரமான விடயமாக எண்ணவேண்டி யிருக்கிறது.

இந்த விடயம் உண்மையானால் அமெரிக்க பிரஜை ஒருவர் எமது நாட்டுக்கு தலைமைப் பதவியை ஏற்பதை மக்கள் விரும்புவார்களா? என்றும் அமைச்சர் டலஸ் கேள்வி எழுப்பினார்.

அதே நபர் சரத் பொன்சேகாவை மட்டுமல்ல உங்களையும் அமெரிக்க பிரஜை என்று கூறியிருந்தாரே என செய் தியாளர் ஒருவர் கேட்டபோது, அடுத்த செய்தியாளர் மாநாட்டில் எனது கடவுச் சீட்டை கொண்டுவந்து உங்களுக்கு காட் டுகிறேன் என அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா யுத்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றியவர் என்பது உண்மைதான். ஆனால் மக்கள் இன்று யுத்த மனோநிலையை மறந்து சுதந்திரமாக சமாதானத்துடன் அன்பாக, நேசத்துடன், நாட்டின் அபிவிருத்தியுடன் வாழவே விரும்புகிறார்கள். யுத்தம் பற்றி பேசவே மக்கள் விரும்பவில்லை.

எனவே யுத்த மனோ நிலையற்ற அபிவிருத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுகின்ற தலைமையையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr