
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஐ.தே.கவின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேரா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாமல் கருணாரத்ன ஆகியோர் கலேபண்டார ஆலயத்தில் மத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலவரங்கள் ஏற்படக் கூடும் என்ற அச்சத்தில் தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக
7 ஆண்டுகள் முன்பு




0 கருத்துகள்:
கருத்துரையிடுக