இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஊடகவியலாளர்களிடமிருந்து அநுர பிரியதர்ஷன யாப்பா பிரியாவிடை

JKR  வியாழன், 11 பிப்ரவரி, 2010


அரசாங்க அமைச்சரவைப் பேச்சாளர் பதவியில் தாம் கலந்துகொள்ளும் இறுதி நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமையலாம் என்றும் அதன்படி உங்கள் அனைவரிடமிருந்தும் விடைபெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மத்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இரண்டு அமைச்சுக்களுக்குப் பொறுப்பாக நான் கடமையாற்றி வருகின்றேன். இவ்வாறான வேளையில், பொதுத் தேர்தலும் நெருங்கி வருகின்றது.

அதேவேளை ஒரு பெரிய மாவட்டமான குருணாகலின் தேர்தல் நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொறுப்பும் என்னைச் சார்ந்துள்ளது. அதற்குப் போதிய அவகாசம் தேவை என்பதால் இந்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன். பெரும்பாலும் அவரும் அதனை அங்கீகரித்துவிட்டார் என்றே நினைக்கின்றேன்.

எனவே இன்று நான் உங்கள் அனைவரிடம் இருந்தும் விடைபெற்றுக்கொள்கிறேன்.

சுமார் 4 வருட காலமாக இந்தப் பணியில் நான் சிறப்பாகச் செயல்பட ஒத்துழைப்பையும் சக்தியையும் வழங்கிய ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகங்கள் அனைத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr