இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்

JKR  திங்கள், 8 பிப்ரவரி, 2010


தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார்.
ஒருவருட புனர்வாழ்வு திட்டத்தின் முடிவின் பின்னர், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பெற்றோர்களிடம் கையளிக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்ற முன்னாள் போராளிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 11ஆயிரம் போராளிகள் தற்போது புனர்வாழ்வு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் சிறுவர் போராளிகளை விடுவிப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr