இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவேண்டும்: சித்தார்த்தன் (புளொட்)

JKR  திங்கள், 8 பிப்ரவரி, 2010


இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை தேடித்தரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ஷ வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுள்ளார்,

அத்துடன் கடந்த தேர்தலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பெருந்தொகையான மக்கள் வெற்றி ஆதரித்துள்ளமை, அவரது தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகிறது.

எனவே ஜனாதிபதியுடன் இணைந்தே சிறுபான்மை மக்களின் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யுகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட பிழைகளை மீண்டும் விடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளினால், முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr