மக்கள் விடுதலை முன்னணியினர் மகரமவில் இன்று வியாழக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடியடிப் பிரயோகம் செய்து களைத்துள்ளனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பிலும் காலி,மாத்தறை ஆகிய பகுதிகளிலும் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்ங்களின்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக