மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 28 வயது இந்திய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அகமதாபாத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்று படித்த ருச்சிகுமார் என்ற இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில், மெல்போர்ன் புறநகர் பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று ருச்சிகுமார் தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.
அவர் தன் உடலின் அருகே, ஒரு தாளில் கைப்பட எழுதி வைத்திருந்த குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மெல்போர்னில் சில சம்பிரதாய சடங்குகள் முடிந்த பின் ருச்சிகுமாரின் உடல் திங்கள்கிழமை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக