நித்யானந்தாவுக்கு எதிராக ரஞ்சிதாவை திருப்ப முயற்சிகள் நடப்பதாகவும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து ரஞ்சிதா தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. தியாகராயநகரில் வீடு பூட்டி கிடக்கிறது.
அவர் ரகசியமாக நித்யானந்தா இருக்கும் இடத்துக்கே போய் ஐக்கியமாகி விட்டதாகவும், இதையடுத்து ரஞ்சிதாவைப் பாதுகாக்க தனி படையை அவர் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறதி.
இதில் சர்வதேச நாடுகளில் உள்ள அவரது பிரதான சீடர்கள் இடம் பெற்றுள்ளார்களாம். இவர்களின் துணையோடுதான் டெல்லியிருந்து அமெரிக்கா சென்றுவிட்டார் ரஞ்சிதா என்று தகவல்கள் கூறுகின்றன.
அங்கு சீடர்களி்ன் பாதுகாப்பில் தங்கியுள்ள ரஞ்சிதா, நித்யானந்தா பெங்களூர் திரும்பிய பின்னரே திரும்பி வருவார் என்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக