மூன்று நாட்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூடு மற்றும் பயமுறுத்தலுடன் ஆரம்பமான வன்முறைகள் தற்போது நாளாந்தம் இடம்பெறும் ஒரு தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளமை, யாழ். மாவட்ட வாக்காளர்களிடையே விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்திள்ளன.
கடந்த வாரம் ஊர்காவற்துறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காச் சென்ற பெண் வெட்பாளர் ஒருவர் குறிப்பிட்ட சிலரினால் பயமுறுத்தப்பட்டுள்ளார். அதேபோன்று, சுயேச்சை வேட்பாளர்களும் கூட, இத்தகைய பயமுறுத்தல்களுக்கு ஊர்காவற்துறைப் பகுதியில் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய சம்பவங்கள் காரைநகர் உட்பட பல இடங்களிலும் தொடர்வதால், வேட்பாளர்கள், வாக்காளர் மத்தியில், விரக்தி நிலை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக