வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள், பணவசதி இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும்
உலருணவுப் பொருட்களில் அரிசி, மா போன்றவற்றை மிகவும் குறைந்த விலைக்கு வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக விற்பனை செய்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
1 கிலோ மா கடைகளில் 75 முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. எனினும் வறுமையின் காரணமாக 1 கிலோ 30 முதல் 45 ரூபா வரை அவர்கள் விற்பனை செய்கின்றனர்.
இது தொடர்பாக விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் தெரிவிக்கையில்,
"எங்களிடம் பணம் இல்லை. உணவுப்பொருட்களை மட்டுமே தருகின்றனர். அவசரத் தேவைகளுக்கும் மருத்துவ வசதிகளுக்கும் எமக்குப் பணம் தேவை. அதனால்தான் இவற்றை விற்று வருகின்றோம்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக