இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

எங்களுக்கு ஏதாச்சும் நடந்தா ஜெயலலிதா தான் பொறுப்பு: கனிமொழி பேச்சு

JKR  வியாழன், 31 மார்ச், 2011

ங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு முழு பொறுப்பு ஜெயலலிதா தான் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

திருச்சி மாவட்டம், துறையூரில் திமுக வேட்பாளர் என். பரிமளா தேவியையும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் என். செல்வராஜையும் ஆதரித்து கனிமொழி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

திமுக கூட்டணியில் ஒன்றாகச் சேர்ந்து வெற்றிக்காக பாடுபடுபவர்கள் இணைந்துள்ளனர். ஆனால் அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கே நன்றாகத் தெரியும். கூட்டணி பற்றி முடிவு செய்யும் முன்பே அதிமுக போட்டியிடும் பட்டியல் வெளியானது.

ஜெயலலிதா யாரைம் மதிக்காதவர். இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்த மதிமுகவை தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு வெளியேற்றியவர் ஜெயலலிதா.

அங்கிருந்து வெளியே வந்த பிறகு இன்னும் ஜெயலலிதாவுக்கு ஆணவமும், அகங்காரமும் குறையவில்லை என்கிறார் வைகோ. அவருக்கு எப்பொழுதுமே ஆணவமும், அகங்காரமும் குறையவே குறையாது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.

கலைஞர் கொண்டு வந்த பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. உழவர் சந்தைகளை மூடியவர் ஜெயலலிதா. சத்துணவில் முட்டை போடும் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா. இந்த திட்டங்கள் எல்லாம் மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்புதான் மீண்டும் செயல்படுத்தப்பட்டன.

தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திருமண உதவித் தொகை ரூ. ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும், ஏழை மக்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

வீட்டுக்கு 4 ஆடுகள் இலவசமாக கொடுத்து அவர்களை மீண்டும் ஆடு மேய்க்கச் சொல்கிறார் ஜெயலலிதா.

வேளாண் இடு பொருள்கள் வீட்டைத் தேடி வரும் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார். சொன்னதைத் தாண்டியும் செய்வார்.

நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். ஆனால் ஜெயலலிதாவோ பொய் உரைகளையும், தவறான பிரசாரத்தையும் செய்கிறார். முதல்வர் கருணாநிதியை இகழ்ந்து பேசுகிறார். மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.

நாகையில் பேசிய ஜெயலலிதா, உடல் நலக் குறைவு என்று சொல்லி கருணாநிதி மருத்துவமனையில் படுத்துக் கொண்டு அனுதாபம் தேட முயற்சிப்பதாக கூறியிருக்கிறார்.

உடல் நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. உடன்பிறப்புகளின் முகத்தை பார்த்தாலே, உடன்பிறப்புகளின் கைத்தட்டலைக் கேட்டாலே உடல் நலக் குறைவு சரியாகிவிடும்.

அடுத்ததாக கனிமொழியை தாக்கிவிட்டு, அனுதாபம் தேட முயற்சிப்பார்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். தந்தையே மகளைத் தாக்குவாரா?

நான் யாரையும் நம்பி இங்கு வரவும் இல்லை, பேசவும் இல்லை. உடன்பிறப்புகளை நம்பித்தான் இங்கே வந்திருக்கிறேன். இந்த உடன்பிறப்புகளைத் தாண்டி தாக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

எங்களில் யாருக்கு எது நடந்தாலும் அதற்கு காரணம் ஜெயலலிதா தான் என்றார்.

பெண்கள் முன்னேற்த்தில் அக்கறை கொண்ட கருணாநிதி:

திமுக ஆட்சியில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

திருச்சியில் நடந்த விழா ஒன்றில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கனிமொழி எம்.பி. தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது கனிமொழி பேசியதாவது,

தமிழகத்தில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூட பயந்த காலம் உண்டு. அந்த நிலைமையை மாற்றி பெண்களை தைரியமாக நடமாடச் செய்தவர் கருணாநிதி. அவர் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுக்க சட்டம் கொண்டு வந்தார். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கான திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரமாகவும், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தருவதாக அறிவித்துள்ளார்.

இது தவிர மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4 லட்சம் கடனில் ரூ.2 லட்சம் மானியம் தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். ஏற்கனவே மகளிர் சுயஉதவிக்குழுகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார் நம் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சியில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற பெண்கள் 10-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்றார். தேர்தல் அறிக்கையில் இதை 8-ம் வகுப்பாக குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் முதல்வர் பெண்கள் கட்டாயம் 10-ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். அவருக்கு பெண்கள் முன்னேற்றத்தில் தனி அக்கறை உண்டு என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr