இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

தாயும் மகளும் வீதியில் நிர்வாணமாக நடக்க நிர்ப்பந்திப்பு; மகளிர் தினத்தில் இந்தியாவில் சம்பவம்

JKR  திங்கள், 12 மார்ச், 2012


ந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தாயும் மகளுமான இருபெண்களை நிர்வாணமாக வீதியில் நடக்கச் செய்த 31 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
பாரிதாபாத் மாவட்டத்தின் ராய்பூர் கலா கிராமத்தில் சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர்சிங் என்பவர் பதின்மர் வயதான தனது மகளுக்கு மார்ச் 11 ஆம் திகதி திருமணம் செய்ய தீர்மானித்திருந்தார். இத்திருமணம் குறித்து கிராமத்தை சேர்ந்த சிலர் நீதிமன்றத்திற்கு ரகசிய தகவல் கொடுத்தால் நீதிமன்றம் தலையிட்டு இத்திருமணத்தை நிறுத்தியது. நீதிமன்றுக்கு தனது அயல்வீட்டில் வசிக்கும் நபரே தகவல் கொடுத்தார் என நம்பிய ஈஸ்வர் சிங், ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட மார்ச் 8 திகதி ஆயுதமேந்திய 30 ஆண்களுடன் இணைந்து அயலவரின் வீட்டிற்குள் புகுந்து அந்நபரை தேடியுள்ளார். அந்நபர் அங்கு இல்லாததால் அவரின் தாயையும் சகோதரியையும் ஈஸ்வர் சிங் தலைமையிலான குழுவினர் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 'அக்குழுவினர் ஆயுதமுனையில் என்னையும் தாயையும் தொந்தரவு செய்தனர். ஆடைகளை களையவைத்து வீதிகளில் நடக்கவைத்தனர். அயலவர்கள் எவரும் எமக்கு உதவ வரவில்லை' என அப்பெணகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேற்படி ஈஸ்வர் மற்றும் அவரின் சகாக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதால் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr