இ லங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கான வாக்கெடுப்பின்போது அரசாங்கத்திற்கு சார்பாக வாக்களித்தமைக்காக அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி ஜி.ஏ.டி. கணேபொல இன்று செவ்வாய்க்கிழமை இத்தடையை நீடித்தார். வழக்குரைஞர் பைஸர் முஸ்தாபாவின் ஆதரவுடன் வழக்குரைஞர் சுஜீவ களுவாராய்ச்சிக்கூடாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேவகே பியசேன தாக்கல் செய்த மனுமீதான விசாரணையின்போதே இத்தடையுத்தரவு நீடிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக