இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

போர் முடிவடைந்து ஒரு வருடம் கழிந்தும் பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது

JKR  ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

போர் முடிவடைந்து ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் நிறைவடைந்த போதும் தொடர்ந்தும் வெற்றிக்களிப்பின் ஊடாக மனித அவலக் குரல்கள் மறைக்கப்படுகின்றன
.பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளன.
இது குறித்து சிவில் சமூக அமைப்புகளினாலும், அரசியல் கட்சிகளினாலும், அரசாங்கத்தரப்பினராலும் கணக்கில் எடுக்கப்படுவதாகவோ அல்லது உரிய நடவடிக்கை எடுப்பதாகவோ அல்லது நிவாரணம் பெற்றுக் கொடுப்பதாகவோ இல்லை என்று வடக்கு, கிழக்கு பெண்கள் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
மேற்படி அமைப்பு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
போர் இடம்பெற்ற பிரதேசங்களில் இடம் பெற்ற உயிரழிவுகள் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் சொல்ல முடியாத சொத்திழப்புகள் முதல் எம்மவர்கள் இழந்தவை ஏராளம்.
அவ்வாறு இழந்த பின்னரும் குடும்ப அங்கத்தவர்களைத் தடுப்பு முகாம்களிலும் அங்கவீனர்களாகவும் கொண்டுள்ள குடும்பங்களில் ஆண்களற்றுத் தனித்துள்ள பெண்கள் ஏராளம் பேர்வரை மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் தனித்து வாழ்கின்றனர்.
அவ்வாறு வாழ்கின்ற போது கிடைக்கின்ற நிவாரணங்களை மட்டும் நம்பியே பல பெண்கள் தமது குடும்பத்தைப் பிள்ளைகளைப் பராமரிக்கின்றனர்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பல பகுதிகள் குறிப்பாக மாந்தை மேற்கு உட்பட வன்னிப்பகுதிகளில் கூடார வாழ்க் கையும் தற்காலிக இடங்களுமே பல குடும்பங்களுக்குத் தஞ்சமாக உள்ளன. இவ்வாறு உயிர்கள், உடைமைகள், சொத் துகள் என்பவற்றை இழந்து கேட்க இடமின்றி அங்கவீனத்தோடும் மன உளச்சலோடும் வாழ் கின்ற பெண்கள் நாளாந்தம் இரவுகளில் வன் முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக் காவது வேதனைக் குரியது. அதிகாரம், பணம் மற்றும் ஆயுத பலம் என்பவற்றின் செல்வாக் கோடு இருப்போரை சாதாரண பெண்கள் எவ்வித அரசியல் பலமுமின்றிய வாழும் பொது மக்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பல குடும்பங்களுக்குத் தஞ்சமாக உள்ளன.இவ்வாறு உயிர்கள், உடைமைகள், சொத்துகள் என்பவற்றை இழந்து கேட்க இடமின்றி அங்கவீனத்தோடும் மன உளச்சலோடும் வாழ் கின்ற பெண்கள் நாளாந்தம் இரவுகளில் வன் முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் இலக் காவது வேதனைக் குரியது. அதிகாரம், பணம் மற்றும் ஆயுத பலம் என்பவற்றின் செல்வாக் கோடு இருப்போரை சாதாரண பெண்கள் எவ்வித அரசியல் பலமுமின்றிய வாழும் பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr