இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாக். வெள்ள பாதிப்பு : மருத்துவப் பணியில் இலங்கை வைத்திய குழு (பட இணைப்பு) _

JKR  புதன், 25 ஆகஸ்ட், 2010

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கவென பாகிஸ்தான் சென்ற 16 பேர் அடங்கிய இலங்கை மருத்துவ குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது
.முதற்கட்டமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சார்சட்டா மாவட்ட வைத்தியசாலையில் வைத்துப் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
சார்சட்டா மாநிலத்திலுள்ள 1.4 மில்லியன் மக்களில் 900,000 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்படி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சார்சட்டா மாவட்டத்தில் பெண்கள், சிறுவர்கள் அடங்கலாக 65 ஆயிரம் பேர் வெள்ளம் காரணமாக பலவித தொற்று நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலங்கை மருத்துவக் குழு அளப்பரிய சேவை ஆற்றி வருகிறது.
அங்குள்ள அநேகமான மக்கள் வாந்திபேதி, மலேரியா போன்ற தோற்றுக்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஏயார் சீப் மார்ஷல் ஜெயலத் வீரக்கொடி சார்சட்டா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, வைத்திய குழுவினரின் பணிகளைப் பார்வையிட்டார். .

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr