இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் காத்தான்குடியில் பறிமுதல்

JKR  செவ்வாய், 5 அக்டோபர், 2010

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மற்றும் மென்பானங்கள் என்பவற்றை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று கைப்பற்றினர்
.காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ஜாபீரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான றஹ்மத்துல்லா மற்றும் பசீர், குலேந்திரகுமார் ஆகியோர் இவ்வர்த்தக நிலையத்தில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது அங்கிருந்த பிஸ்கட் வகைகள், மாஜரின் வகைகள், மென்பானங்கள், கடலை வகைகள் உட்பட காலாவதியான மற்றும் பல பாவனைக்குதவாத உணவுப் பொருட்களைக் கண்டெடுத்து கைப்பற்றினர்.
அத்தோடு குறித்த வர்த்தக நிலையத்தையும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்து மூடினர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் காத்தான்குடி சுகாதார அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அவற்றை விற்பனைக்காக வைத்திருந்த குறித்த வர்த்தகருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபீர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr