இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள அமைச்சர்கள் டியு குணசேகரா மற்றும் டினேஷ் குணவர்த்தன தலைமையில் பிரமுகர்கள் வருகை.

JKR  வெள்ளி, 22 அக்டோபர், 2010

யாயாழ்ப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிலும் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளவென வருகைதந்த அமைச்சர்களையும் பிரமுகர்களையும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (22) காலை விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் டினேஷ் குணவர்த்தன பிரதி அமைச்சர் விஜிதமுனி டி சொய்சா ஆகியோர் தலைமையில் அமைச்சு உயரதிகாரிகள் அரச உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று வரவேற்றார். பிரமுகர்களை விமான நிலையத்தில் வைத்து பாரம்பரிய முறைப்படி பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து யாழ். மக்களின் சார்பில் தமது மகிழ்ச்சியினையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டமை விசேட அம்சமாகும்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr