இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திருமலையில் தமிழ் இலக்கிய விழா இன்று ஆரம்பம்

JKR  சனி, 23 அக்டோபர், 2010

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் தமிழ் இலக்கிய விழா திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முன்றலில் இருந்து பண்பாட்டு பவனியுடன் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.

தமிழ் இன்னிசை அணியினர் முன்னே செல்ல அறிஞர்கள், பேராளர்கள் தொடர்ந்து வந்தனர். தமிழ் அறிஞர்கள் வேடம் புனைந்த பாடசாலை மாணவர்கள் அணியும் இதில் பங்கேற்றனர்.
பாடசாலை மாணவர்களின் கலாசார பவனியும் இடம்பெற்றது. காவடி, கும்பம், கோலாட்டம், கும்மி, நடனம் என்பனவும் இவ்ஊர்வலத்தில் இணைந்து கொண்டன.
அலங்கரிக்கப்பட்ட தமிழ் அன்னை, வாகனம் ஒன்றில் வர அதற்கு மாணவிகள் வீதிநெடுக மலர் தூவி வரவேற்றவாறு வந்தனர்.
திருஞானசம்பந்தர் வீதி, பிரதான வீதி, விகாரை வீதி, ஊவர்மலை மத்திய வீதி வழியாக பண்பாட்டு ஊர்வலம், விழா நடைபெறும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியை வந்தடைந்தது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr