இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இலங்கை ஐனாதிபதிக்கு எதிர்ப்பு

JKR  செவ்வாய், 12 அக்டோபர், 2010

புதுடில்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேக்கு அழைப்பு அனுப்ப்ப்பட்டிருப்பதற்கு தமிழகத்தில் சில தரப்புக்களிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றனவா என்று ஆராய ஐ.நா மன்றமே மூவர் குழு ஒன்றை அமைத்திருக்கும் நிலையில், பொதுவாக உலகநாடுகள் மத்தியில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டன்ங்கள் எழுந்துள்ள நிலையில் மஹிந்த ராஜ பக்சேக்கு இப்படி சிறப்புச்செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாததென்றும், ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு இந்திய அரசு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

புறக்கணிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவள்வனும் மஹிந்தாவிற்கு அனுப்ப்ப்பட்டிருக்கும் அழைப்பை திரும்ப்ப்பெறவேண்டும் என்றும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் நிறைவு விழாவை புறக்கணிக்கவிருப்ப்தாகவும் கூறியிருக்கிறார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அரசின் அழைப்பு தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில் வேலைச் செருகுவதாகும் எனக்கூறியிருக்கிறார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr