இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகையில்,
இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள கலாசாரமும் அதன் மொழிகளுமே தேசிய கொள்கைகளாக கருதப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியும். ஆனால் தேசிய பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டவர்களாகவே அவர்கள் வாழ வேண்டும். மேலும் தமிழில் தேசிய கீதத்தை பாடுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள தடையானது வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டில் சில சக்திகளும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் சிலவும் கருத்துக்களை வெளியிடுகின்றன. இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை எந்தவொரு நாட்டிற்கும் அஞ்சாது. ஏனென்றால் சகல அதிகாரங்களையும் கொண்ட தனி சிங்கள இராச்சியமே இலங்கையாகும்.
எனவே இந்தியா உள்ளிட்ட எந்தவொரு வெளிநாடுகளின் சவால்களுக்கும் முகம் கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். தேசிய கீதம் விடயத்தில் யாருக்கும் தலையிட உரிமை கிடையாது. அது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என்றார்.























0 கருத்துகள்:
கருத்துரையிடுக