இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ் மாநகர சபை உறுப்பினரின் தந்தையார் மறைவு! அமைச்சர் இறுதி அஞ்சலி

JKR  புதன், 22 டிசம்பர், 2010

யாழ் மாநரகசபை உறுப்பினர் மங்களநேசனின் தந்தையார் குழந்தைவேலு அப்புத்துரை மனுவல் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஆசீர்வாதப்பர் வீதி அரியாலையிலுள்ள அன்னாரது வீட்டிற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி வணக்கத்தைச் செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இயற்கை மரணம் எய்திய அப்புத்துரை மனுவல் அவர்களுக்கு இறக்கும் போது வயது 83 ஆகும்.
ஆசிரியப் பணிபுரிந்த இவர் இறுதியாக பாடசாலை அதிபராகப் பணியாற்றியதன் பின்னர் ஓய்வு பெற்றார்.
இறுதி நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று பூதவுடல் நல்லூர் பரி யாக்கோ தேவாலய சேமற்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வுகளினால் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் கல்விச் சமூகம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr