இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

29. கடந்த வாரம் சனிக்கிழமை பி.பி.சி. தமிழோசையில் எனது சிறு மடல் ·

JKR  புதன், 2 பிப்ரவரி, 2011

டந்த வாரம் பி.பி.சி. தமிழோசையில் நீதிப் போராட்டம் என்ற தலைப்பிலான செவ்வியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த குருவையா என்ற விவசாயியையும் அங்கம்மாள் என்ற அவரது மனைவியையும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையினர் ஒரு திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு 7 நாட்கள் சித்ரவதை செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்காமல் சிறு விவசாயியான குருவையா இறந்து விட்டார்.
காவல்துறையின் பிடியில் இருந்த போது தனது கணவர் கண் முன்னே அங்கம்மாள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.உண்மையில்.கல் நெஞ்சம் கொண்டோரையும் கலங்க வைக்கும் செவ்வி தனது பெற்றோருக்காக காவல்துறையினரால் நிகழ்ந்த கொடுமைகளுக்கு தீர்வு தேடி வழக்காட முன்வந்துள்ளார் பாதிக்கப்பட்டோரின் முதல் மகனான மலைச்சாமி.பாராட்டுக்குறிவர் தமிழகத்தில் எடுத்ததற்கு எல்லாம் விருது கொடுக்கும் நம்ம தமிழ்நாடு அரசு இந்த வலிசுமந்து தனது பெற்றோருக்கு வாதாட வந்திருக்கும் மலைச்சாமிக்கும் விருது கொடுக்கக் கூடாதா? அடுத்து ஈழத்தில் இனப்படுகொலை இதயத்தில் இரத்தம் என்று கருப்புக்கோட்டை அணிந்து கொண்டு மேடைகளில் வழக்காடும் திரு வைக்கோ போன்றவர்களுக்கு இந்த மலைச்சாமியின் கண்ணீர்க்கதை புரியவில்லையா? எங்கே போனது உங்கள் தமிழ் இன உணர்வு உங்கள் அரசியல் வாழ்க்கையே தமிழ் இனம் போட்ட பிச்சைதானே !


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr