இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

4ஆயிரத்து500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையை வரையறுக்க முடியாது

JKR  புதன், 9 பிப்ரவரி, 2011

புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ள 4ஆயிரத்து 500 முன்னாள் போராளிகளின் விடுதலை தொடர்பில் கால எல்லையினை வரையறுக்க முடியாது. இதுவரையில் 55 சதவீதமான போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்.

புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 375 முன்னாள் போராளிகளில் 212 பேர் சித்தியடைந்தும் 40 போராளிகள் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளனர். விடுதலையாகும் முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பங்கள் சமூகத்தில் கிடைக்காமல் புனர்வாழ்வில் கூடிய பயனை எதிர்பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரிகேடியர் சுனந்த ரணசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr