இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இயக்குநர் சீமான் உட்பட 1000 பேர் கைது

JKR  செவ்வாய், 6 செப்டம்பர், 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலிஸாரின் தடையையும் மீறி நடை பயணம் மேற்கொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் உட்பட சுமார் 1000 பேர் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

6 மாதத்திற்கு கப்பல் சேவை தொடர்ந்தால் தூக்கில் தொங்கி உயிரை விடுவேன்: சீமான்

JKR  திங்கள், 20 ஜூன், 2011

லங்கை இந்திய கப்பல் சேவையை ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும், நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன் என நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

சட்டசபை தேர்தலில் காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி: சீமான்

JKR  வியாழன், 7 ஏப்ரல், 2011

ரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியில் தான் தமிழினத்தின் எழுச்சி உள்ளது என்று இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொடுப்பது 2 ஜி பணம்... வாங்கிக் கொள்ளுங்கள்! - சீமான்

JKR  சனி, 26 மார்ச், 2011

தேர்தல்கள் ஜனநாயகத்தைக் காக்க நடப்பதாகக் கூறிக் கொண்டு, நாட்டையும் மக்களையும் சிதைத்துவிட்டது. இங்கே எல்லாம் இப்போது இலவசம். ஓட்டுக்கு மட்டும் காசு என்றாகிவிட்டது, என்றார் இயக்கநர் சீமான்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு

JKR  வெள்ளி, 21 ஜனவரி, 2011

முதல்வர் கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று முதலில் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தற்போது தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனது கட்சியும் போட்டியிடாது, காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று கூறியுள்ளார்

ஓகஸ்ட் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் சீமான்

JKR  சனி, 24 ஜூலை, 2010

பிரிவினை வாதத்தினை தூண்டும் விதத்தில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குநருமான சீமான், வேலூர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். இவர்மீது இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தினை மீறிய குற்றமும் பதிவுசெய்யப்பட்டது.

நளினியின் கணவர் முருகனை சந்தித்தார் சீமான்

JKR  திங்கள், 19 ஜூலை, 2010

இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள 'நாம் தமிழர்' அமைப்பின் தலைவர் இயக்குநர் சீமான், இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியில் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு அதே சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள நளினியின் கணவர் முருகனை சந்தித்து உரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள சகோதர்களை மிரட்டும் சீமான்

JKR  சனி, 10 ஜூலை, 2010


தமிழகத்தில் எத்தனை சிங்களர்கள், எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை நாம் தமிழர் இயக்கம் கணக்கெடுத்து வைத்திருக்கிறது. இனி ஒரு தமிழக மீனவர் தாக்கப்பட்டால் கூட, இங்குள்ள ஒரு சிங்களன் கூட உயிருடன் நாடு திரும்பிப் போக முடியாது. ஒருவரையும் உயிருடன் விட மாட்டோம் என நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் எச்சரித்துள்ளார்.

திபெத்திய அகதிகளுக்கு வழங்கிய சலுகை இலங்கை தமிழருக்கும் வேண்டும் - சீமான்

JKR  வியாழன், 1 ஜூலை, 2010

தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசாணையானது இலங்கைத் தமிழ் மாணவர்கள் படிக்க தடையாக உள்ளது. அவர்களுக்கு கல்வி மறுக்கும் அரசாணையினை திரும்பப்பெற இந்திய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பட விழாவில் பங்கேற்போருக்கு எதிராக போராட்டம் தொடரும் : சீமான்

JKR  செவ்வாய், 1 ஜூன், 2010

கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி (IIFA) விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க விரும்புவோருக்கு எதிராக போராட்டம் தொடரும் என தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் அறிவித்துள்ளார்.

ஜெயராம் வீடு மீதான தாக்குதல் வழக்கு - சீமானுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


சென்னை: தமிழ்ப் பெண்களை கறுத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று நடிகர் ஜெயராம் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து அவரது சென்னை வீடு தாக்கப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜெயராமின் பேச்சு, தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சை கண்டித்தனர்.

இந்நிலையில் கடந்த 5 ந் தேதி சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள நடிகர் ஜெயராமின் வீடு மீது தாக்குதல் நடந்தது. வீட்டிற்குள் தீப்பந்தம் எறியப்பட்டது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த சிலரைக் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவு படுத்தும் விதமாக பேசியதால் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. அப்போது உணர்ச்சி வேகத்தால் இளைஞர்கள் சிலர் ஜெயராம் வீட்டை தாக்கி உள்ளனர்.

இதில் எனக்கும் எனது இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. வேண்டும் என்றே நான் தூண்டி விட்டதாக போலீசார் வழக்கில் என்னை சேர்த்துள்ளனர்.

கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும், தமிழ் மரபையும் கடைபிடிக்கும் என்னை தொல்லை செய்யும் விதமாக போலீசார் தேடி வருகின்றனர். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி கே.என்.பாட்ஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் மூத்த வக்கீல் என்.சந்திரசேகரன் ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறுகையில், இயக்குநர் சீமான் வளர்ந்து வரும் தலைவர். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளார். அவர் எந்த வன்முறைக்கும் காரணமாக அமையவில்லை.

வேண்டும் என்றே போலீசார் இரவு பகல் பாராமல் அவர் வீட்டுக்கு சென்று தொல்லை கொடுத்து சித்ரவதை செய்கின்றனர். எனவே போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் தர வேண்டும் என்றார்.

அரசு வக்கீல் துரைராஜ் கூறுகையில், இதே போன்ற செயல்களை சீமான் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் மீது இது போன்ற வன்முறை சம்பவம் தொடர்பான 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என்றார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பாட்ஷா, சம்பவ இடத்துக்கு சீமான் வராததால் அவருக்கு முன் ஜாமீன் தரப்படுகிறது. தலா ரூ. 25 ஆயிரத்துக்கு அவர் 2 உத்தரவுவாதத்தை வழங்க வேண்டும். தினமும் காலை 10.30 முதல் 12.30 க்குள் வளசரவாக்கம் போலீசில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்து முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr