இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.நகரில் கண்டனப் பேரணி

JKR  வியாழன், 21 மார்ச், 2013



க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க முற்படுவதை எதிர்த்தும் மாபெரும் கண்டனப் பேரணியொன்று இன்றையதினம் யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. . (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அழிவு யுத்தத்திற்கு சுயலாப அரசியல்வாதிகளே காரணம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

JKR  செவ்வாய், 26 பிப்ரவரி, 2013


சு யலாப அரசியல் வாதிகளின் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளே அழிவு யுத்தத்திற்கு காரணமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைப்பு!

JKR  புதன், 13 பிப்ரவரி, 2013

<

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்திய செயற்பாடுகளை கொண்ட நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்து மக்கள் சேவைக்காக கையளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

நயினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இறங்குதுறை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

JKR  



யினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

சுன்னாகத்தில் மின்நிலையம் திறப்பு

JKR  செவ்வாய், 12 பிப்ரவரி, 2013


னாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (12-02-2013) காலை 9.30 மணியளவில் சுன்னாகத்தில் அமைந்துள்ள புதிய மின்பிறப்பாக்கிகளை உத்தியோகபூர்வமாக இயக்கி குடாநாட்டுக்கான தடங்கலற்ற மின்சார விநியோகத்தை ஆரம்பித்து வைத்தார்.

நாட்டின் அமைதியையும். சுபீட்சத்தையும் வேண்டி அமைச்சர் சிறப்புப் பூசை வழிபாடு

JKR  திங்கள், 4 பிப்ரவரி, 2013



சு தந்திர தினமான இன்றையதினம் (04) நாட்டின் அமைதியையும். சுபீட்சத்தையும் வேண்டி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருகோணமலையில் அமைந்துள்ள கோணேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யுத்தத்தின் அதிக பாதிப்புக்களைச் சுமந்தவர்கள் வன்னியின் வறிய மக்களே - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

JKR  வெள்ளி, 1 பிப்ரவரி, 2013


டந்த கால யுத்தத்தின் அதிக பாதிப்புக்களைச் சுமந்தவர்கள் வன்னியின் வறிய மக்களே என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அவுஸ்திரேலிய தூதுக்குழு அமைச்சரவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

JKR  வியாழன், 31 ஜனவரி, 2013


வுஸ்திரேலிய நாட்டின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் யூலிபிஷொப் தலைமையிலான குழுவினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து அமைச்சின் செயற்திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இந்தாண்டுக்குள் பச்சிலைப்பள்ளி நிறைவான அபிவிருத்தி நிறைந்த பிரதேசமாக மாற்றமடையும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

JKR  புதன், 30 ஜனவரி, 2013


ச்சிலைப்பள்ளி பிரதேசம் இந்தாண்டுக்குள் நிறைவான அபிவிருத்தி நிறைந்த பிரதேசமாக மாற்றமடையும் அதற்காக இன்னும் செய்யவேண்டிய பணிகள் சிலவே என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வடக்கிற்கும் தெற்கிற்கும் தென்னிந்திய உறவுகளுக்கும் இடையில் உறவுப் பாலம்

JKR  சனி, 19 ஜனவரி, 2013


யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப்பாலமாக இருக்கும் அதேவேளை, தென்னிந்திய உறவுகளுடன் கலாசாரத்தைப் பேணும் வகையிலும் இவ்வாறான நிகழ்வு அமையப் பெறவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வாழ்வின் எழுச்சி வறிய மக்களின் வாழ்வை முன்னேற்றும் திட்டமாகும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

JKR  புதன், 16 ஜனவரி, 2013



வாழ்வின் எழுச்சித்திட்டம் வறுமைகோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வினை முன்னேற்றும் திட்டமாகும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

நீதித்துறை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசுவது சாத்தான்கள் வேதம் ஒதுவதற்கு ஒப்பான செயலே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

JKR  சனி, 12 ஜனவரி, 2013


நே ற்றையதினம் பாராளுமன்றத்தில் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றப்பிரேரணை தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள விசேட அறிக்கை....

அரசியலுரிமை முதற்கொண்டு வாழ்வின் எழுச்சி வரை சகல உரிமைகளும் பெற்று எமது மக்கள் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழும் காலத்தை நாங்கள் விரைவில் உருவாக்கிக் காட்டுவோம் பாராளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

JKR  புதன், 9 ஜனவரி, 2013


வா ழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்ட பிரேரணை மீதான விவாதம் இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

சில்ப 2012 தேசிய கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்!..

JKR  வெள்ளி, 28 டிசம்பர், 2012


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் சில்ப 2012 கண்காட்சியும் விற்பனை சந்தையும் கொழும்பு பண்டாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்திலுள்ள சிறிமாவோ பண்டாநாயக்கா ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் இன்று (27) சம்பிரதாயப் பூர்வமாக அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடன் விளையாட்டுத்துறை மேலும் வளரும் ! வடமாகாண ஆளுநர்

JKR  வெள்ளி, 21 டிசம்பர், 2012

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வழிகாட்டுதலுக்கு அமைய எதிர்காலங்களில வடமாகாண விளையாட்டுத்துறையை மென்மேலும் வளர்த்தெடுப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்த வேளைகளிலெல்லாம் அவர்தம் துயர்துடைத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! வடமாகாண கல்விச் செயலாளர்

JKR  புதன், 19 டிசம்பர், 2012


க்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்து மக்களுக்காகவே தொடர்ச்சியாக பணியாற்றி வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தான் என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ்.வர்த்தக நிலையங்களின் உரிமைமாற்றங்கள் சுற்றறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

JKR  செவ்வாய், 18 டிசம்பர், 2012


நிரந்தர வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதை வியாபாரம் முன்றாகத் தடைசெய்யப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

யாழ.மாநகர சபையூடான அபிவிருத்திப் பணிகளுக்கு விசேட நிதிஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்பு

JKR  திங்கள், 17 டிசம்பர், 2012


யாழ.மாநகர சபையூடான அபிவிருத்திப் பணிகளுக்கு விசேட நிதிஒதுக்கீட்டிற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கடலுணவு பதப்படுத்தும் நிலையம் பாசையூரில் திறப்பு!

JKR  வெள்ளி, 14 டிசம்பர், 2012

டலுணவு பதப்படுத்தும் நிலையம் திறந்து வைக்கப்படுவதனூடாக யாழ்ப்பாணத்தில் 500 ற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்க முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

போருக்குப் பிந்திய அமைதி நிலையைச் சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி - ஐ.நா. பிரதிநிதிகளிடம் சட்டத்தரணி றெமீடியஸ்

JKR  திங்கள், 10 டிசம்பர், 2012


2009 ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் நிலைமையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த ஐ.நா. பிரதிநிதிகளிடம் சிவில் சமூகம் சார்பாக எடுத்துரைத்த சட்டத்தரணி றெமீடியஸ், இதனைச் சீர்குலைப்பதற்குச் சில சக்திகள் திட்டமிட்டு முயற்சி செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) ஐ.நா.வுக்கான இலங்கை விதிவிடப் பிரதிநிதி பாலித கொஹண தலைமையில் கடந்த (8) யாழ் குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த ஜப்பான், பங்களாதேஷ், நைஜீரியா, ரூமேனியா உள்ளிட்ட சில நாடுகளில் ஐ.நா.வுக்கான நிரந்தர விதிவிடப் பிரதிநிதிகள் குழுவினரை யாழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரில்கோ உல்லாச விடுதியில் சந்தித்து உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போர் நடைபெற்றுவந்த காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் ஒரு மனித உரிமை சட்டத்தரணியாகக் கடமையாற்றியவர் என்ற வகையில் குடாநாட்டின் அன்றைய நிலைமைகளை நன்கறிந்துகொண்டிருப்பதாக இங்கு தெரிவித்த றெமீடியஸ், போருக்குப் பின்னர் மனித உரிமை நிலைமைகள் மிகவும் முன்னேற்றமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

போர் நிறைவடைந்த பின்னர் சுமார் 900 வரையிலான அரசியல் கைதிகள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடி அவர்களை விடுவித்திருப்பதாக இங்கு குறிப்பிட்ட சட்டத்தரணி றெமீடியஸ், இரண்டு தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு ஒருவர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அரசாங்கத்தின் புனர்வாழ்வு முகாமில் இணைந்து மீண்டும் சமூக வாழ்வுடன் இணைந்துகொள்வதற்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள மனவிருப்பத்துடன் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

“போர் நிறைவடைந்த பின்னர் இதுவரையில் 10க்கும் குறைந்தளவானவர்களே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிலும் பெருமளவிலானவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்” என்று தெரிவித்த அவர், அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைத் தூண்டிவிட்டு சில சக்திகள் மேற்கொண்ட குழப்ப நடவடிக்கைகள் காரணமாக அநியாயமாக சில மாணவர்கள் கைதுசெய்யப்படும் நிலைமை தோன்றியதாகவும், இது தற்போதைய அமைதி நிலையைச் சீர்குலைப்பதற்கு திட்டமிட்டு சில சக்திகள் மேற்கொள்ளும் சதி நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டினார்.

“யாழ் பல்கலைக்கழகச் சூழலில் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையை மக்கள் சிறிதும் விரும்பவில்லை. அமைதி சீர்குலைக்கப்படுவது குறித்து அவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்துக்கு எதிராக ஒரு சில அரசியல் கட்சிகள் இணைந்து யாழ் நகரில் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள் எவரும் கலந்துகொள்ளாதது இதனைத் தெளிவாக எடுத்துக்காட்டியது” என்றார் சட்டத்தரணி றெமீடியஸ்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் சார்பாக முன்னதாக உரையாற்றிய பொறியியலாளர் சூரியகுமார், சுமார் 40 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் வாழ்ந்துவிட்டு, போர் நிறைவடைந்த பின்னர் தமது மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக திரும்பி வந்தவன் என்ற வகையில், 2009க்குப் பின்னர் போர் நடைபெற்ற பகுதிகளில் மிக வேகமாக அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதை தம்மால் தெளிவாக அவதானிக்க முடிவதாகக் கூறினார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் தலைமையில் ஆரம்பான இந்தச் சந்திப்பில், போருக்குப் பிந்திய மூன்று வருட காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் துரிதமாக ஏற்படுத்தப்பட்டு வரும் மீள்குடியேற்றம், கண்ணிவெடியகற்றல், உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகள், வீடமைப்பு, மின்சார வசதி, கல்வி, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பணிகளை விரிவாக காண்பியங்களுடன் கூடிய புள்ளிவிபரங்களுடன் விளக்கிக் கூறினார்.

“உலகில் எந்தவொரு நாடும் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்களை இவ்வளவு குறுகிய காலத்தில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றி, அவர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை துரிதமாக அமைத்துக்கொடுத்ததாக வரலாறில்லை. இது இலங்கை அரசாங்கம் ஈட்டியிருக்கும் ஒரு சாதனை” என்று குறிப்பிட்ட அவர், மேன்மைதங்கிய ஜனாதிபதி தலைமையில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன், மாகாண ஆளுநர் என்ற வகையில் தாமும் இணைந்து இந்தப் பணிகளை துரிதமாக மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பொறியியலாளர்களான சூரியகுமார், ராமதாஸ், சட்டத்தரணி ரெங்கன், இந்து மதகுரு பாபு சர்மா, யாழ் இலங்கை வெளிநாட்டு இராஜதந்திரச் சேவையைச் சேர்ந்த தர்மகுலசிங்கம், யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, சட்டத்தரணியும், யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.றெமீடியஸ், முன்னாள் ஹாட்லி கல்லூரி அதிபர் சிறிபதி வங்கி முகாமையாளர் சுபசீலன், வட மாகாண கல்வி அபிவிருத்திக்குழு தலைவர் செல்வவடிவேல், பாராளுமன்ற செய்தி இணைப்பாளர் சுதர்சன், சிரேஷ்ட  ஊடகவியலாளரும், கல்வி வழிகாட்டல் ஆலோசகருமான கோ.றுஷாங்கன், கடல்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், உள்ளிட்ட குழுவினர் ஐ.நா. பிரதிநிதிகளுடனான இந்தச் சந்திப்பில் சிவில் சமூகம் சார்பாகக் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் இறுதியில், ஐ.நா. பிரதிநிதிகளுடன் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துச் சொல்வதற்கான சந்தர்ப்பம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்படுத்திக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.






-->

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr