இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

ஷியாமல் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை - ஐ.நா

JKR  சனி, 29 ஆகஸ்ட், 2009


ஷியாமல் ராஜபக்ஷ கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது உடல்நிலை காரணமாகவே அவர் இறந்துள்ளார் எனவும் ஐ.நா கூறியுள்ளது.இந்த மாத ஆரம்பத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மருமகன் ஷியாமல் ராஜபக்ஷ தன்சானியாவில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
இது கொலையா அல்லது சாதாரண மரணமா என தன்சானியா மற்றும் இலங்கைப் போலீசார் துப்பறிந்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின்படி இவர் கொலை செய்யப்பட்டுளதாக கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் கூறியிருந்தது.
இப்போது அதற்கு நேர் முரணான அறிக்கையைத் தந்துள்ளது ஐ.நா.ஷியாமல் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், அவருக்கு முன்னமே இருந்த உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் இறந்துள்ளார் எனவும் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகையில் கூறப்பட்டுள்ளதோடு தமது புலனாய்வு இதனுடன் முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.இதேவேளை ஷியாமலின் உடலில் நச்சுப்பதார்த்தங்கள் ஏதும் இருந்ததா என்ற மருத்துவ சோதனை அறிக்கை இன்னமும் வரவில்லை. அந்த அறிக்கையில் தமக்கு ஒரு நகல் தருமாறும் ஐ.நா கேட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr