தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 27வயது பெண் கடந்த திங்களன்று இனந்தெரியாதோரால் எரியூட்டி கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலீசார் தெரிவித்துள்ளனர். போம்புவெல தித்தகொடல்வத்த பிரதேசவாசியான பெண்ணே கட்டிலுடன் சேர்த்து எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவதினம் அதிகாலை தீய்ந்த மணம் வருவதையடுத்த அங்கு சென்ற உறவினர் ஒருவர் குறித்த பெண் கருகிய நிலையில் சடலமாக காணப்பட்டதையடுத்து பொலீசில் முறையிட்டார். இதனைத் தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டது. ஜன்னலில் அடிக்கப்பட்ட பொலித்தீனை கிழித்து உள்நுழைந்தே கொலையாளி இந்த பாதகத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக