இலங்கையில் சிறப்பாக செயற்படுகின்ற மத்தியஸ்த சபைக்கான ஜனாதிபதியின் சான்றிதழ் யாழ். சங்கானை மத்தியஸ்த சபை பெற்றுக்கொண்டுள்ளது.
பொதுமக்களிடையே ஏற்படும் பிணக்குகளை நீதிமன்றம் செல்லாமலேயே சமரசம் மூலம் தீர்க்கும் நோக்கிலேயே மத்தியஸ்த சபைகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கையில் சிறப்பாக செயற்படுகின்ற மத்தியஸ்த சபையாக யாழ். சங்கானை மத்தியஸ்த சபை தெரிவுசெய்யப்பட்டு அதற்கான ஜனாதிபதி சான்றிதழ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் சங்கானை மத்தியஸ்த சபையின் தவிசாளர் வைரமுத்து சிவபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நீதி சட்ட விவகார பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ் மிலிந்த மொரகொட ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இலங்கையின் சிறந்த பல நோக்கு கூட்டுறவுச் சங்கமாக யாழ். தென்மராட்சி கிழக்கு கொடிகாமம் ப.நோ.கூ.சங்கம் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதி சான்றிதழ் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக