ஜெர்மனியின் ஆட்சித் தலைவி ஆங்கேலா மெர்க்கல் |
யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்: அங்கேலே மெர்க்கெல்
ஐரோப்பிய ஒற்றை நாணயமான யூரோவின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் பொருட்டு கடுமையான நடவடிக்கைகளைக் கைகொள்வது பற்றியும் யூரோ நாணயத்தைப் புழங்கும் 16 நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என ஜெர்மனி வலியுறுத்துகிறது.
யூரோ நாணயத்தைப் புழங்கும் ஒரு நாடு தொடர்ந்து விதிகளை மீறிவந்தால், அந்த நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்வதையும் கடைசி வழியாக யூரோ நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜெர்மன் சான்செல்லர் அங்கேலா மெர்க்கெல் கூறியுள்ளார். கிரேக்கம் தற்பொது எதிர்கொண்டுவரும் நிதி நெருக்கடிதான் யூரோ நாணயம் இதுவரை சந்தித்ததிலேயே மிகப் பெரிய சவால் என மெர்க்கெல் வருணித்துள்ளார்.
யூரோ நாணயத்தின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நினைத்துப்பார்த்திராத ஒரு விஷயத்தைப் பரிசீலிக்கவும் ஜெர்மனி தயார் என்பதை மெர்க்கெலின் பேச்சு காட்டுவதாக பெர்லினில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
யுவானின் மதிப்பை உயர்த்தச் சொல்லி சீனா மீது அழுத்தம்
யுவான் நோட்டுக்கள் |
யுவானின் பெறுமதி மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சீனாவிற்கெதிராக தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்க செனட் சபை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.
யுவானின் மதிப்பு குறைவாக இருப்பது சீன ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகிறது; ஆனால் சீனாவோ சீன நாணயப் பெறுமதியின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்படுவதாக கூறுகிறது.
யுகாண்டா புராதன சமாதி தீக்கிரை
தீக்கிரையான புராதன சமாதிகள் |
யுகாண்டா தலைநகர் கம்பாலா அருகேயுள்ள இந்த இடம் தீக்கிரையானதை ஒட்டி ஒரு வார காலம் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கசூபி சமாதிகள் என்று அழைக்கப்பபடும் இந்த கூரை வேய்யப்பட்டக் கட்டிடங்கள் ஐ.நா.மன்றத்தின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இடத்துக்கு யுகாண்டாவின் அதிபர் யொவேரி முஸெவேனி வருவதை ஆத்திரம்கொண்ட மக்கள் தடுத்தபோது பாதுகாப்புப் படையினர் நடத்தியத் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 'பாலியல் வலயமைப்பை நடத்திய' சாமியாருக்கான பொலிஸ் காவல நீட்டிப்பு
சர்ச்சைகுரிய சாமியார் துவேதி |
இந்த வலையமைப்பு குறித்த தகவல்களை முழுதுமாக வெளியே கொண்டுவர தங்களுக்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுவதாக போலிஸ் தரப்பு வழக்குரைஞர் ஒருவர் தலைநகர் டெல்லி நீதிமன்றம் ஒன்றில் கூறினார்.
சாமியார் என்று தன்னைத்தானே வர்ணித்துக்கொள்ளும் ஷிவ் மூரத் த்விவேதி தான் தவறு செய்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.
சட்டவிரோத பாலியல் தொழிலை நடத்தியதான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக