இலங்கையில் முதற்தடவையாக மரபணு முறையில் ஆட்டுக் குட்டியொன்றைப் பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவபீடம் உருவாக்கியுள்ளது.
இது நாட்டின் மரபணு தொழில்நுட்பத்தின் பாரிய வெற்றியாகுமென மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
உயிரோட்டமுள்ள மரபணுக்களைச் சீரான முறையில் பேணுவதற்கான வசதிகள் இலங்கையில் காணப்படாமையால் அதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பலனாகவே இந்த ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 வருட காலமாக மேற்கொள்ளபட்ட ஆய்வுகளின் பிரதிபலனாகவே இந்த ஆட்டுக்குட்டியை உருவாக்க முடிந்ததாகவும் டாக்டர் தம்மிக்க பெரேரா மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக