அணியை பிரபலப்படுத்தம் தூதுவராக அசின் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக அவருடன் அந்த அணி உரிமையாளர்கள் பேசி வருகிறார்கள். விரைவில் அசின் கொச்சி அணியின் தூதுவராக அறிவிக்கப்படுகிறார்.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அவர் கொச்சி அணி வீரர்களை உற்சாகப்படுத்துவார் எனவும் நம்பப்படுகிறது.ஐ.பி.எல். போட்டிக்கும், நடிகர், நடிகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஷாருக்கான், ஜூகிசாவ்லா இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி உள்ளனர். பஞ்சாப் அணிக்கு பிரீத்தி ஜிந்தாவும், ராஜஸ்தான் அணிக்கு ஷிலா ஷெட்டியும் உரிமையாளர்களாக உள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்களை முன்பு கத்ரினா கயூப் உற்சாகப்படுத்தினார். தற்போது தீபிகா படுகோனே அந்த வேலையை செய்கிறார். அக்ஷய் குமார், அமீர்கான் ஆகியோரும் அணியை பிரபல்யப்படுத்தும் விளம்பரங்களில் வருகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை திரிஷா ஸ்டேடியத்துக்கு வந்து உற்சாகப்படுத்தினார். அந்த வரிசையில் இனி நடிகை அசின் இடம் பெற போகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதிய அணியான கொச்சி பங்கேற்கிறது. ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரூ.1500 கோடிக்கு மேல் எடுத்து கொச்சி அணியை வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக