அவர் தமது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், அதனை பின் தொடர்ந்து வந்த கெப் வாகனம் ஒன்றில் இருந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்தார்.
கொல்லப்பட்டவர் 26 வயதுடைய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த கொலையை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் தரப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இரகசிய புலனாய்வு அதிகாரி ஒருவரின் தகவல் அடிப்படையில் இந்த தாக்குதலுக்கு ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கும் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும் அங்கு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில் பல பொது மக்கள் காயமடைந்தனர். இதனுடனும் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக