இதனையடுத்து புத்தளம் பொலிஸார், தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, பாலாவி, எருக்கலம்பிட்டி வாக்குச்சாவடிக்கு முகவராகச் சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஹம்மத் ஆசாத் என்பவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த முச்சக்கர வண்டியும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது காலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம் காலி தங்கல்ல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்தார்.
எனினும் துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பூசல் காரணமாகவே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இச்சம்பவங்களின் போது எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 67 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக