இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சர்வகட்சிக் குழு கூடும்!

JKR  திங்கள், 5 ஏப்ரல், 2010


பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்ததன் பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக உருவாக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஒன்றுகூடலை மீண்டும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வகட்சிக் குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளில் மாற்றங்கள் ஏற்பட சாத்தியம் உண்டு. இந்த நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தை நடத்துவது ஏற்புடையதாகும்.
இந்தக் குழுவினை சக்தி மயப்படுத்தி பொது யோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் கூறினார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் சர்வகட்சிக் குழு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr