இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

புளொட் வேட்பாளர் பசுபதி பரசோதிலிங்கம் (நந்தன்) தலைமையில் புளொட் பிரதிநிதிகள் மாந்தை கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்-

JKR  சனி, 3 ஏப்ரல், 2010


வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளரான பசுபதி பரசோதிலிங்கம் தலைமையிலான புளொட் பிரதிநிதிகளும், சர்வதேச கிளைகளின் முக்கியஸ்தர்களும் இன்று முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பகுதியின் மல்லாவி, பாண்டியன்குளம், செல்வபுரம், சிவபுரம், ஆறாம்கட்டை, அம்பாள்புரம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்து மக்களைச் சந்தித்துள்ளனர்.
புளொட் வேட்பாளர் பசுபதி பரசோதிலிங்கம் அவர்களுடன், கழகத்தின் ஜேர்மன், லண்டன் கிளைகளின் முக்கியஸ்தர்களான ஜெகநாதன், தயா மற்றும் புளொட் பிரதிநிதிகளான கோணேஸ், அன்ரன் உள்ளிட்டவர்களும் இவ்விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். அப்பகுதி மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களிலும் புளொட் வேட்பாளர் பசுபதி பரசோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகள் உரையாற்றினர். இதன்போது மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம், தொழில்வசதி போன்ற குறைபாடுகளைத் நிவர்த்தி செய்வதற்கும் இம்மக்களின் வாழ்வினை மேம்படுத்துவதற்கும் கட்சி உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்றும் கட்சியின் பணிகள் தொடர்வதற்கு மக்களின் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் தேவையென்றும் தெரிவித்ததுடன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இந்த விஜயம் மற்றும் கூட்டங்களில் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr