தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் இன்றுமுதல் தங்களுடைய கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென 16 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கடந்த 01ம் திகதி இலங்கையை வந்தடைந்தனர்.
மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் நேற்றையதினம் தேர்தல் கண்காணிப்பு தொடர்பிலான விசேட பயிற்சியில் ஈடுபட்டதாக பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக