சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் திட்டமிடலுக்கு அமைவாக 60 வயதுக்கு மேற்பட்ட உங்களுக்கு இலவசமாக கண் வில்லைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே 60 வயதைத் தாண்டிய எமது கௌரவமிக்க மூத்த பிரஜைகள் இலவசமாக உங்களுக்கான கண் வில்லைகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பப்படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்யவேண்டும்.
உங்களுக்குரிய விண்ணப்பப்படிவங்கள் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அலுவலகத்தில் இன்றுமுதல் விநியோகம் செய்யப்படுகின்றன.
இன்றும் நாளையும் வழங்கப்படவிருக்கும் விண்ணப்படிவங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். உங்களுக்கு இலவசமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்படவிருக்கும் ஒவ்வொரு கண் வில்லைகளும் 15000 ரூபா பெறுமதிமிக்கவை என்பதையும் கூடவே உங்களுக்கான கண்மருத்துவ உதவிகளும் வழங்கப்படவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது மூத்த பிரஜைகளுக்கு கண்ணொளி கொடுப்போம்
அவர்களின் கௌரவம் காப்போம்.
இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அன்பு கலந்த அறிவிப்பாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக