இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

குழப்பத்தை விளைவிப்போர் மீது கண்ட இடத்தில் சுட உத்தரவு! தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

JKR  செவ்வாய், 6 ஏப்ரல், 2010

நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர் தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதே வேளை, குழப்பங்களை விளைவிப்போர் மீது கண்ட இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத் தும்படி பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு
பொதுத் தேர்தலுக்கான பிரசார நட வடிக்கைகள் யாவும் நேற்றுமுன்தினம்
நள்ளிரவுடன் முடிவடைந்தன. அத்துடன் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
58 ஆயிரத்து 700 பொலிஸார் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேவையைப் பொறுத்து இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் அழைக்கப்படு வார்கள்.
கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவ டைந்துள்ளன. தேர்தல் சட்ட திட்டத் தின்படி
தேர்தல் தினம்வரை எவரும் பிரசாரங்கள் செய்ய முடியாது.
அதேநேரம் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் எதனையும் முன்னெடுக்கவும் முடியாது. இதேவேளை, குழப்பங்கள் விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்படி பொலிஸாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் தேர்தல் வன்முறையால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் மாவத்தகமயில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பொதுவாக கட்சிகளுக்கிடையிலேயே வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன என பொலிஸார் தெரிவித்தனர். குருநாகல், மட்டக்களப்பு, அனுராதபுரம், பதுளை ஆகிய 4 மாவட்டங்களில் வன்முறைகள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தலை மிகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கு ஏற்ப பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, நாட்டின் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடத்தி முடிப்பதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குரிய ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களைத் தயார் செய்யும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
8 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதிவரை நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ரீதியாக 196 ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 7,625 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr