கருணா அம்மான் மற்றும் கே.பி. உள் ளிட்ட புலித்தலைவர்களுக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்யவேண்டிய தேவை ஒன்று உள்ளது என்றும், அந்தத் தேவையை நிறை வேற்றும் வகையில் மஹிந்தவின் அரசு செயற்படுகிறது என்றும் பொன் சேகாவின் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
பொன்சேகாவின் கொழும்பு அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய அக்கட்சி யின் செயலாளர் விஜித ஹேரத்தே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
அரசில் உள்ள அரசியல்வாதி களை விடவும் ஜெனரல் சரத் பொன்சேகாவே புலிகளின் முதல் இலக்காக இருந்தார். அதனால்தான் புலிகள் தற் கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் அவரைக் கொலை செய்ய முற்பட் டனர். தேசத்தின் அதிஷ்டம் காரண மாக அவரின் உயிர் பிழைத்தது. புலி களை ஒழித்துக்கட்டினார்.
இருப்பினும், பொன்சேகாவை எப்படியாவது இல்லாது ஒழிக்க வேண்டிய தேவை யுத்தத்தால் எஞ்சி யுள்ள கருணா அம்மான் மற்றும் கே.பி. போன்ற புலித் தலைவர்க ளுக்கு உள்ளது. அவர்களின் தேவையை நிறைவேற்றும் விதமாகவே அரசு செயற்படுகிறது.கே.பியிடம் இருக் கும் பணம் மற்றும் தங்கம் போன்ற வற்றைச் சுருட்டி எடுப்பதற்காக கே.பியின் விருப்பத்துக்கு ஏற்ப அரசு செயற்படுகிறது.
அரசின் சதி வலையில் இருந்து பொன்சேகாவைக் காப்பாற்றுவதற்காக இந்நாட்டு மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் சின்னமான வெற்றிக் கிண் ணத்துக்கே வாக்களிக்க வேண்டும்.
இத் தேர்தலில் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று அடுத்த மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு வந்து அவரது கன்னி உரையை நிகழ்த் துவார். என்றார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக