இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

திரையரங்குக்கு தீ வைக்கப்பட்டது

JKR  வெள்ளி, 18 ஜூன், 2010

இலங்கையின் மட்டக்களப்பில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ''ராவணம்'' திரைப்படம் திரையிடப்படவிருந்த அரங்கத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சினிமா தியேட்டர்களின் உரிமையாளர்களுக்கு "சுதந்திர இலங்கையின் தமிழர்கள் " எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அநாமதேய துண்டுப் பிரசுரமொன்றில் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் அனுட்டிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான துண்டுப் பிரசுரம் வெளியாகியுள்ள நிலையில் "ராவணன்'' தமிழ் திரைப்படம் திரையிடப்படவிருந்த மட்டக்களப்பு "சாந்தி" திரையரங்கின் திரை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவமானது சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், தாக்கத்தையும் எற்படுத்தியுள்ளதாக சினிமா துறையுடன் தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
தீக்கிரையான திரை
தீக்கிரையான திரை
தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், "ஐபா" என்ற இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெறவிடாமல் தடுக்க முயற்சித்த இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்த முற்பட்ட தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்தினருக்கு எதிரப்பைத் தெரிவிக்கும் வகையிலும், இந்திய சினிமா வியாபாரம் இலங்கையில் தங்கியுள்ளது என்பதை நிருபிக்கவும் இந்த ''தென்னிய தமிழ் சினிமா எதிரப்பு வாரம்'' பிரடகனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr