முப் படைகளையும் சேர்ந்த விசேட குழுவினரால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஐவர் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணி ஒருவரையோ அல்லது இராணுவ உயர் அதிகாரி ஒருவரையோ ஜெனரல் பொன்சேகா தெரிவு செய்து அவரின் ஊடாக தனது வாதங்களை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க உள்ளதாக ஜெனரல் பொன்சேகா சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த செவ்வி இராணுவ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக