ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனுவை சமர்ப்பிக்கக் கூடாது என்ற நோக்கில் ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
குறித்த மனுவில் ஜெனரல் சரத் பொன்சேகா கைச்சாத்திட வேண்டும் எனவும், அதற்கான சந்தர்ப்பம் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவச் சட்டத்தின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக