இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

இராணுவ பொலிஸாரின் நீர், ஆகாரத்தை ஏற்பதற்கு ஜெனரல் பொன்சேகா மறுப்பு

JKR  புதன், 10 பிப்ரவரி, 2010


இராணுவ பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ பொலிஸாரினால் வழங்கப்பட்ட நீரையோ, ஆகாரத்தையோ உட்கொள்ளாமல் 24 மணித்தியாலங்கள் பட்டினியில் இருந்துள்ளார்.

ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருதடவை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் உட்கொள்ளாத அவர் தனது மனைவி அனோமா கொண்டுவந்திருந்த உணவு மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவருடன் மூன்று மணித்தியாலங்கள் உரையாடியுள்ளார்.

இராணுவ இரகசியங்களை வெளியிட்டமை மற்றும் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவ பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டையிலுள்ள கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் ஐ.தே.கவின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து உரையாடியுள்ளனர்.

கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியின் மூன்றாவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அவரது மனைவியும் சட்டதரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ ஆகிய இருவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே பார்த்துள்ளனர்.

ஜெனரல் பொன்சேகாவை பார்வையிடுவதற்கு அவரது குடும்ப அங்கத்தினருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குகின்ற நேரத்தில் மட்டுமே அவரை சந்தித்து கலந்துரையாட முடியும்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவிற்கு இராணுவ பொலிஸாரால் நீர், ஆகாரம் வழங்கப்பட்ட போதிலும் அவர் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒரு முறை உட்கொள்ளவேண்டிய மாத்திரைகளையும் அவர் எடுத்துக்கொள்ளவில்லை.

பசி பட்டினியில் இருந்த அவரை 24 மணித்தியாலங்களுக்கு பின்னர் அவருடைய மனைவியும் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் எடுத்து சென்ற உணவை உட்கொண்டுள்ளார். அத்துடன் தேவையான மருந்து மாத்திரைகளையும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்ததன் பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பின்னரே ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு தடவை மருந்தை உட்கொள்ளுமாறும் இல்லையே உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்று வைத்தியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். அந்த ஆலோசனையின் பிரகாரமே அவர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

ஜெனரலைச் சந்திக்கச் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

"கடற்படையின் கனிஷ்ட பிரிவு அதிகாரிகளின் குடிமனைத் தொகுதியின் 3ஆவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை நானும் அவரது மனைவியுமான அனோமா பொன்சேகாவும் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் சென்று சந்தித்தோம்.

அவருடன் இருவரும் சுமார் 3 மணித்தியாலங்கள் கலந்துரையாடியதுடன் மனத்தைரியத்தையும் ஊட்டினோம். எவ்விதமான அச்சமுமின்றி இருக்கின்ற அவர் தன்னை எவரும் இதுவரையிலும் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்தார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவ பொலிஸார் 10 பேரின் பலத்த கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் அவரை மீண்டும் சந்திக்க வேண்டுமாயின் மற்றுமொரு தடவை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அங்கிருந்த இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்" என்றார்.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr