ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தானுக திலகரட்ண தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைகொப் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்த இருந்த நிலையில் அவர் தன்னைத்தானே தனியார் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார். ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஓர் விடயமாகக் காணப்பட்டது. இதேவேளை ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக தானுக திலகரட்ன நேற்றையதினம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய நிலையிலேயே தனியார் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளார். முன்னதாக சரத் பொன்சேகாவின் இரு மகள்மாரும் அமெரிக்கா சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக