ஜெனரல் சரத் பொன்சேகா முப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பொன்சேகா மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் டில்வின் சில்வாவும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தொரிவித்தார்.
“ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றால் தான் விரும்பாத அரச உத்தியோகத்தர்களை 24 முதல் 72 மணித்தியாலங்களுக்குள் கடமையிலிருந்து இடைநிறுத்த உத்தேசித்திருந்தார்.
அவர் அமெரிக்காவில் இருந்தபோது டில்வின் சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன் அந்த உரையாடல் தொடர்பான முழு விபரங்களை நாம் வைத்திருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக