சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்தில் குறித்த இராணுவ அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசியின் உள்வரும் வெளிச் செல்லும் அழைப்புக்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சந்தேக நபர்களிடம் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீண்ட விசாரணைளை ஆரம்பித்துள்ள அதேவேளை தற்போது கடமையில் உள்ள அதிகாரிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக புலனாய்வுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக