இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

சிரேஷ்ட,உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் : மன்னார் மக்கள் அதிர்ச்சி

JKR  செவ்வாய், 9 பிப்ரவரி, 2010


மன்னாரில் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லஸாரிஸ் அசன் ஆகியோரின் திடீர் இடமாற்றம் அம்மாவட்ட மக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவர்கள் இருவரும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களிடம் தொலைபேசி மூலமாக கப்பம் கோருதல் போன்ற பலவிதமான பாதக செயல்களில் தலையிட்டு தீர்த்து வைத்ததோடு தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றி வந்தனர்.

இவர்கள் இருவரினதும் இடமாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் திடீரென மாற்றப்படுவதுடன் பதவி இறக்கமும் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr