நாட்டின் தற்போதைய சட்டங்கள் மக்களின் நலனுக்காகவே நடைமுறைபடுத்த வேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்
. ஹொரணையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹொரண அடவாங்கொட ஆரம்பப் பாடசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கணினிப் பிரிவை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று இடம் பெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், "நகரப்புற பாடசாலைகளுக்கு கிடைக்கும் வளங்கள் போன்று கிராமப்புற பாடசாலைகளுக்கும் கிடைக்கச் செய்வது எமது கடமை" எனத் தெரிவித்துள்ளார்.
சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்றால் நகரத்துக்கு செல்ல வேண்டிய நிலைமை மாற்றப்பட்டு கிராமப் புறங்களிலும் சிறப்பான கல்வியை பெற்றுக் கொள்ளும் வகையில் கிராமப்புறங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக