இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

யாழ். குடாநாட்டில் இருவர் காணாமல் போயுள்ளனர்

JKR  திங்கள், 22 மார்ச், 2010




யாழ். குடாநாட்டில் இருவர் காணாமல் போனமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய மாணவனான 17 வயதான சிவஞானம் சஜீபன் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவருடைய தாயாரான கமலாதேவி முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தபின்னர் புதிய டியூட்டரி வகுப்புக்கு போவதாக கூறிசென்றவர் அதன் பின் வீடுதிரும்பவில்லை என தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இவரின் குடும்பம் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையிலேயே மீள்குடியேற்ற செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஊர்காவற்றுறை நாரந்தனை பிரதேசத்தின் வியாபாரியான 34 வயதான டொன் பொஸ்கோ ரொனாலட் சிலாத் என்ற குடும்பஸ்தரை கடந்த 15 ஆம் திகதி முதல் காணவில்லை என முறையிடப்பட்டுள்ளது.
இவர் வியாபார நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் வந்தநிலையிலேயே காணாமல் போயுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr